புனே: மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான ஐபிஎல் 2வது போட்டியில் புனே வீரர் ஹர்திக் பாண்டியா தொடர்ச்சியாக 4 சிக்ஸ் விளாசினார்.
10வது ஐபிஎல்லின் இரண்டாவது போட்டி புனேவில் நடைபெற்று வருகிறது. இதில் மும்பை இந்தியன்ஸ் அணி, ரைஸிங் புனே சூப்பர்ஜெயண்ட் அணி பலப்பரீட்சை நடத்துகிறது. புனேவில் நடைபெற்று வரும் இந்த போட்டியில் டாசில் வென்ற புனே அணி முதலில் பீல்டிங்கை தேர்வு செய்தது.
இந்த போட்டியின் கடைசி நேரத்தில் களமிறங்கிய மும்பை வீரர் ஹர்திக் பாண்டியா அதிரடி காட்டினார். ஆட்டத்தின் கடைசி ஓவரை அசோக் டிண்டா வீசினார். அதை எதிர் கொண்ட ஹர்திக் பாண்டியா நாலாபுறமும் சிக்ஸர் விளாசினார். அந்த ஓவரில் 4 சிக்சர், 1 பவுண்டரி என 28 ரன்கள் குவித்தார். 15 பந்துகளை சந்தித்த ஹர்திக் பாண்டியா 35 ரன்கள் குவித்து இறுதி வரை ஆட்டமிழக்கவில்லை. இதனால் மும்பை அணஇ 20 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 184 ரன்கள் குவித்தது.