வெறியில் ரசிகர்கள்
இந்த நிகழ்வுக்கு பிறகு வெறிகொண்டு அலைகிறார்கள் வங்கதேச ரசிகர்கள். வங்கதேசத்தில் இந்தியா சுற்றுப் பயணம் செய்தபோது, டோணி தலைமையை வெட்டி வங்கதேச பவுலர் கையில் வைத்ததை போல போட்டோஷாப் செய்து அதை பரப்பி அதிர்ச்சியளித்தனர். மேலும், டோணி, கோஹ்லி உள்ளிட்ட இந்திய வீரர்களுக்கு பாதி தலையை ஷேவ் செய்து அசிங்கப்படுத்தி போட்டோஷாப் வெளியிட்டனர்.
வங்கதேசம் போட்டி
இந்த போட்டோக்கள் அனைத்தும் வைரலாகின. இந்தியா-பாகிஸ்தான் போட்டியைவிட இந்தியா-வங்கதேசம் போட்டித்தான் பெரும் எதிர்பார்ப்பையும், பரபரப்பையும் ஏற்படுத்துவதாக அமைந்துவிட்டது.
நாயை துரத்தும் புலி
இந்த நிலையில், நாய் ஒன்றை புலி துரத்துவது போல ஒரு படத்தை போட்டோஷாப் செய்துள்ள வங்கதேச ரசிகர்கள் அதை வைரலாக்கியுள்ளனர். புலியை வங்தேசம் என உவமைப்படுத்திக்கொள்கிறார்கள் அந்த நாட்டு ரசிகர்கள்.
வீடியோ பாருங்கள்
இந்திய தேசிய கொடி நாய் மேல் போர்த்தப்பட்டுள்ளதை போலவும், வங்கதேச தேசிய கொடி புலி மீது போர்த்தப்பட்டுள்ளதை போலவும் போட்டோஷாப் செய்யப்பட்டுள்ளது. நாட்டு மக்கள் உணர்வுக்கு மதிப்பளிப்பது கடமை என்பதால், நமது வீடியோவில் இந்திய தேசிய கொடி மறைக்கப்பட்டுள்ளது.