முரளிதரன் பேட்டி
இதுகுறித்து ஹைதராபாத் அணி பயிற்சியாளரும், இலங்கை முன்னாள் வீரருமான முத்தையா முரளிதரன் கூறியதாவது: பெங்களூர் பிட்ச் வழக்கமாக ரன் குவிப்புக்கு உதவுதான். ஆனால் இந்த வருடம் அந்த மைதானத்தில் அதிக ரன்கள் சேகரிக்க முடியவில்லை. எனவே 130 ரன்களே அதிகம் என்றுதான் நான் கருதியிருந்தேன். எனவே ஹைதராபாத் அணி எடுத்த ஸ்கோரே கொல்கத்தாவை மடக்க போதுமானதாக இருந்திருக்கும்.
இந்த ஸ்கோர் போதும்
இந்த ஸ்கோரை காத்துக்கொள்ள எங்களிடம் வலுவான பந்து வீச்சாளர்கள் இருந்தனர். ஆனால் மழை காரணமாக 6 ஓவர்களாக குறைக்கப்பட்டு இலக்கு மாற்றியமைக்கப்பட்டதால் ஹைதராபாத் அணி வெற்றி பெறுவது கஷ்டமாகிவிட்டது. 20 ஓவர்கள் இருந்திருப்பின், 3-4 விக்கெட்டுகளை சீரான இடைவெளியில் வீழ்த்தியிருந்தாலே, எதிரணியை சுருட்டியிருக்க முடியும்.
வேகமாக ஆடியிருக்க கூடாது
ஹைதராபாத் அணி ஏன் பெரிய ஷாட்டுகளை ஆடவில்லை என ரசிகர்கள் கேட்கலாம். இந்த பிட்சில் இதைவிட வேகமாக அடித்து ஆட முற்பட்டிருந்தால், 80 ரன்னுக்குள் சுருண்டிருப்போம். எனவே பொறுமையாக ஆடி 128 ரன்களை எடுத்தோம். இதுவே இந்த பிட்சுக்கு போதுமானதாக இருந்திருக்கும்.
மழைதான் காரணம்
ஹைதராபாத் அணி இந்த சீசன் முழுக்க சிறப்பாகவே ஆடியது. ஆனால், மழையால் ஆட்டம் பாதிக்கப்பட்டு தோல்வியடைந்துவிட்டது. இதற்காக யாரையும் குறை சொல்ல முடியாது. ஒருவருக்கொருவர் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொண்டு வேலையை பார்க்க வேண்டியதுதான். கொல்கத்தா அணிக்கு எனது வாழ்த்துக்கள். இவ்வாறு முரளிதரன் தெரிவித்தாரர்.