வாழ்வா-சாவா?
இந்நிலையில், இவ்விரு அணிகள் நடுவேயான 3வது டெஸ்ட் போட்டி நாளை நாக்பூரில் தொடங்குகிறது. இந்த டெஸ்ட் போட்டி தென் ஆப்பிரிக்க அணிக்கு வாழ்வா-சாவா என்ற போட்டியாகும்.
இந்தியாவுக்கு சாதகம்
ஏற்கனவே ஒரு டெஸ்ட் வென்ற இந்திய அணி, எஞ்சிய 2 டெஸ்ட்டுகளில் ஒன்றில் வென்றாலும், தொடரை கைப்பற்றும். தென் ஆப்பிரிக்காவோ 2 டெஸ்ட்டிலும் வெற்றி பெற்றால்தான் தொடரை கைப்பற்ற முடியும் என்ற கட்டாயத்தில் உள்ளது.
சமன் செய்யவும் வாய்ப்பு
தென் ஆப்பிரிக்க அணி எஞ்சிய 2 டெஸ்ட் போட்டிகளில், ஒன்றில் வெற்றி பெற்று, ஒன்றில் டிரா செய்தாலும், தொடரை சமன் செய்ய முடியும்.
9 வருடங்களாக தோற்கவில்லை
தென் ஆப்பிரிக்க அணி 2006ம் ஆண்டு இலங்கையில் டெஸ்ட் போட்டிகளில் ஆடிய பிறகு தொடர்ந்து 9 வருடங்களாக வெளிநாடுகளில் டெஸ்ட் தொடர்களை இழக்கவேயில்லை. 2008-09 மற்றும் 2012-2013 ஆகிய ஆண்டுகளில் ஆஸ்திரேலிய மண்ணில், வலிமையான ஆஸி. அணிக்கு எதிரான டெஸ்ட் தொடர்களும் இதில் அடங்கும்.
தொடர்களையும் வென்றது
இடைப்பட்ட காலத்தில், 2008ல் இங்கிலாந்திலும், வெஸ்ட் இண்டீசில் 2010லும், நியூசிலாந்தில் 2011-12லும், பாகிஸ்தானில், 2007-08லும், இலங்கையில் கடந்த வருடமும், வங்கதேசத்தில் 2007-08லிலும், ஜிம்பாப்வேயில், 2007-08லும், டெஸ்ட் தொடர்களை வென்றுள்ளது தென் ஆப்பிரிக்கா.
ஒருமுறைதான் வெற்றி
இந்தியாவில் தென் ஆப்பிரிக்க அணி 1996-97ல் டெஸ்ட் தொடரை 2-1 என்ற கணக்கில் இழந்தது. 2004-05ல் 0-1 என்ற கணக்கில் தோற்றது. 2007-08லும், 2009-10 ஆண்டுகளிலும், நடந்த டெஸ்ட் போட்டிககள் டிரா ஆனது. மொத்தம் வந்த 5 விசிட்டுகளில், 1999ல் மட்டுமே தென் ஆப்பிரிக்கா இந்திய மண்ணில் டெஸ்ட் தொடரை வென்றது.
சாதிக்குமா கோஹ்லி படை?
நாளை தொடங்கும் நாக்பூர் டெஸ்ட் போட்டியில் இந்தியா வெற்றி பெற்றால், தென் ஆப்பிரிக்க அணி டெஸ்ட் தொடரை இழக்கும். இதன்மூலம், அதன் 9 ஆண்டுகால வெளிநாட்டு மண் சாதனை முறியடிக்கப்படும். சாதிக்குமா கோஹ்லி படை?