156 ரன்களில் சுருண்டது
இந்திய அணியின் பந்து வீச்சை எதிர்கொள்ள முடியாமல் திணறிய தென் ஆப்ரிக்கா 40.2 ஓவரில் 156 ரன்களை எடுத்து ஆட்டமிழந்தது. இந்திய பந்துவீச்சில் ஜுலன் கோஸ்வாமி, பூனம் யாதவ் தலா 3 விக்கேட்டுகளையும், ஷிகா பாண்டே 2 விக்கெட்டுகளையும், ஏக்தா பிஷ்ட், தீப்தி ஷர்மா தலா 1 விக்கெட்டையும் வீழ்த்தினர்.
33வது ஓவரிலேயே வெற்றி
அடுத்து களமிறங்கிய இந்தியா 2 விக்கெட் இழப்புக்கு 33வது ஓவரிலேயே இலக்கை எட்டி கோப்பையை கைப்பற்றியது. இந்தியா 33 ரன்னுக்கு 2 விக்கெட் இழந்து திணறிய நிலையில், பூனம் ராவுத் - கேப்டன் மித்தாலி ராஜ் ஜோடி பொறுப்புடன் விளையாடி வெற்றியை வசப்படுத்தியது.
8 விக்கெட் வித்தியாசத்தில்
பூனம் ராவுத் 70 ரன்களும் கேப்டன் மித்தாலி ராஜ் 62 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர். இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் எளிதாக வென்று கோப்பையை கைப்பற்றியது.
100 வது போட்டி
இறுதிப் போட்டியில் சிறந்த வீராங்கனையாக பூனம் ராவுத், தொடரின் சிறந்த வீராங்கனையாக தீப்தி ஷர்மா ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். கேப்டனாக மித்தாலி ராஜ் களமிறங்கிய 100வது போட்டி இது என்பது குறிப்பிடத்தக்கது.