கோப்பை வெல்லவில்லை
பெங்களூர், குஜராத், சன் ரைசர்ஸ் ஆகிய மூன்று அணிகளுமே இதுவரை ஐபிஎல் கோப்பையை வென்றது கிடையாது.
புது சாதனை
வரும் ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் போட்டியில் இதில் எந்த அணி வென்று சாம்பியன் ஆனாலும், அது ஐபிஎல் தொடரில் ஒரு புது சாதனைதான்.
மூன்று அணிகள் வரலாறு
ஏனெனில் 2008ல் ஐபிஎல் தொடர் ஆரம்பிக்கப்பட்டபோதிலிருந்தே ஆடிவரும் பெங்களூர் அணியும், 2013ல் உருவாக்கப்பட்ட சன் ரைசர்ஸ் ஹைதராபாத் (முன்பு டெக்கான் சார்ஜர்ஸ்) அணியும் கோப்பையை வென்றதே கிடையாது. இவ்வாண்டுதான் உருவாக்கப்பட்ட குஜராத் அணி பற்றி சொல்ல வேண்டியதில்லை.
ரசிகர்கள் ஆவல்
எனவே 3ல் எந்த அணி வென்றாலும் ஐபிஎல் தொடரில் ஒரு புது சாம்பியன் கிடைக்கப்போகிறது. அந்த புது சாம்பியன் யார் என்பதை அறிய, ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள்.