மகாராஷ்டிராவில் உற்சாகம்
மும்பையும், புனேவும் மகாராஷ்டிராவைச் சேர்ந்த நகரங்கள் என்பதால் இந்த மாநில ரசிகர்கள் யார் ஜெயித்தாலும் சந்தோஷம்தான் என்ற மன நிலையில்தான் இருந்தனர்.
இந்திய கேப்டனுக்கே வெற்றி
இருப்பினும் மும்பை இந்தியன்ஸ் வெல்ல வேண்டும் என்றே பலரும் நினைத்தனர். காரணம், புனே அணியின் கேப்டனாக இருந்தவர் ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த ஸ்டீவ் ஸ்மித். அதேசமயம், மும்பை கேப்டனாக இருந்தவர் இந்தியாவின் ரோஹித் சர்மா. எனவே இந்தியரைக் கேப்டனாக கொண்ட மும்பை வெல்ல வேண்டும் என்றே பலரும் நினைத்தனர்.
டோணிக்காக புனேவுக்கு ஆதரவு
அதேசமயம், புனே அணியில் டோணி இருந்ததால் புனேதான் வெல்ல வேண்டும் என்று நினைத்தவர்களும் ஏராளம். டோணி ரசிகர்கள் மிகப் பெரிய எதிர்பார்ப்பிலும் இருந்தனர். பாகுபலி ரேஞ்சுக்கு டோணியை மீம்ஸ் கிரியேட்டர்கள் தூக்கி வைத்திருந்ததால் பெரும் எதிர்பார்ப்பும் இருந்தது.
சொதப்பிய டோணி
ஆனால் கடைசியில் டோணி சொதப்பி விட்டார். நேற்று அவரது பங்களிப்பு மிக மிக குறைவாகவே இருந்தது. மறு முனையில் ஸ்டீவ் ஸ்மித் உறுதியுடன் போராடிப் பார்த்தார். ஆனால் முடியவில்லை. கடைசி நேரத்தில் மும்பை அழகாக வெற்றி பெற்று விட்டது.
மகாராஷ்டிராவுக்கே வெற்றி
இதனால் மும்பை ரசிகர்கள் பெரும் உற்சாகமடைந்தனர். அதேசமயம், தோல்வி அடைந்தாலும் கூட நம்ம மாநிலத்தின் மும்பை வென்றதே. அதுவே மகிழ்ச்சிதான் என்று புனே ரசிகர்களும் தங்களைத் தேற்றிக் கொண்டனர்.