கொல்கத்தா: ஐபிஎல் போட்டிகளை தமிழ் வர்ணனையில் கேட்டு ரசிக்க ஏற்பாடு செய்துள்ளது சோனி நெட்வொர்க். அதேநேரம், கன்னடத்தில் வர்ணனை கிடையாது என்றும் கூறியுள்ளது.
10வது ஐபிஎல் கிரிக்கெட் திருவிழா ஏப்ரல் 5ம் தேதி தொடங்குகிறது. ஹைதராபாத்தில், அன்றைய தினம், பெங்களூர்-ஹைதராபாத் அணிகள் பலப் பரிட்சை நடத்த உள்ளன.
இந்த போட்டிகளை சோனி நெட்வொர்க் சேனல்கள் ஒளிபரப்பு செய்ய உள்ளன. ஆங்கில வர்ணனையுடன் போட்டியை ரசிக்க சோனி சிக்ஸ் சேனல் ஏற்பாடு செய்துள்ளது. அதேநேரம், தமிழ், தெலுங்கு, வங்காளம் மற்றும் ஹிந்தி மொழி வர்ணனைகள் சோனி ஈஎஸ்பிஎன் சேனலில் ஒளிபரப்பாகிறது. அதேநேரம், கன்னட மொழியில் நிகழ்ச்சி ஒளிபரப்புவது குறித்த திட்டம் இல்லை என்று சோனி நெட்வொர்க் நிறுவன செய்தித் தொடர்பாளர் ஒருவர் தெரிவித்தார்.