183 ரன்களில் ஆல் அவுட்
இதையடுத்து, இலங்கை அணி பேட்டிங்கில் இறங்கியது. இந்திய அணியினரின் பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் 183 ரன்களுக்கு அனைத்து விக்கெட்இதையடுத்து, இலங்கை அணி பேட்டிங்கில் இறங்கியது. இந்திய அணியினரின் பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் 183 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. அஸ்வின் 5 விக்கெட்டுகளை அள்ளி இலங்கைக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்தார். டுகளையும் இழந்தது. அஸ்வின் 5 விக்கெட்டுகளை அள்ளி இலங்கைக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்தார்.
பாலோ- ஆன்
இலங்கை அணி இந்தியாவை விட முதல் இன்னிங்சில் 439 ரன்கள் பின்தங்கிய நிலையில் இருந்ததால், இந்தியா பாலோ-ஆன் கொடுத்தது. இதனால் இலங்கை அணி தொடர்ந்து 2-வது இன்னிங்சை தொடர்ந்தது.
கருணாரத்னே- மெண்டிஸ் ஜோடி
தொடக்க வீரர்களாக உபுல் தரங்காவும், கருணாரத்னேவும் களம் இறங்கினர். உபுல் தரங்கா விரைவில் ஆட்டம் இழந்தார். அதன்பின், கருணாரத்னே- குசால் மெண்டிஸ் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது குறிப்பிடத்தக்கது.
209 ரன்கள்
சிறப்பாக விளையாடி சதம் அடித்த மெண்டிஸ், 110 ரன்கள் எடுத்த நிலையில் பாண்ட்யா பந்தில் விக்கெட் கீப்பர் சகாவிடம் கேட்ச் கொடுத்து ஆட்டம் இழந்தார். 3-ஆவது நாள் ஆட்ட முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு 209 ரன்கள் குவித்திருந்தது.
கருணாரத்னே சதம்
இந்நிலையில், 4-ஆவது நாள் ஆட்டம் இன்று காலை தொடங்கியது. இதில் அபாரமாக விளையாடிய கருணாரத்னே சதமடித்தார். இந்திய பந்துவீச்சாளர்களுக்கு பெரும் நெருக்கடியைக் கொடுத்தார். ஆனால், புஷ்பகுமாரா அஸ்வின் பந்துவீச்சில், திடீரென போல்டானார். அவரைத் தொடர்ந்து களமிறங்கிய சண்டிமாலை, ரவீந்திர ஜடேஜா அவுட்டாக்கினார்.
அபார வெற்றி
அதன்பின்னர், கருணாரத்னேவுடன் ஜோடி சேர்ந்த மேத்யூஸ் விக்கெட் விழாமல் பார்த்துக் கொண்டார். இலங்கை அணி உணவு இடைவேளை வரை 4 விக்கெட் இழப்புக்கு 302 ரன்கள் எடுத்துள்ளது. கருணாரத்னே 136 ரன்களுடனும், மேத்யூஸ் 28 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். ஆனால், ஆட்டத்தின் இறுதியில் இந்தியா ஒரு இன்னிங்ஸ் மற்றும் 53 ரன்களில் அபார வெற்றி பெற்றுள்ளது. அத்துடன் இந்த தொடரையும் இந்திய அணி கைப்பற்றியுள்ளது.