தரம்சாலா: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 4ஆவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியில் விராட் கோஹ்லி ஆடவில்லை. காயம் காரணமாக பெவிலியனில் அமர்ந்துள்ளார்.
இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. 4வது டெஸ்ட் போட்டி தரம்சாலாவிலுள்ள இமாச்சலப் பிரதேச கிரிக்கெட் சங்க மைதானத்தில் இன்று தொடங்கி நடக்கிறது. காயம் காரணமாக விராட் கோலி பங்கேற்கவில்லை என்பதால், அஜிங்கிய ரஹானே கேப்டனாக செயல்படுகிறார்.
இருப்பினும், கோஹ்லி தானாகவே முன்வந்து, பெருந்தன்மையோடு 12ஆவது வீரராக செயல்படுகிறார்.
இந்திய அணிக்கு உத்வேகம் அளிக்கும் வகையில், வீரர்களுக்கான தண்ணீர் மற்றும் குளிர்பானங்களை தானே மைதானத்துக்கு கொண்டு செல்கிறார். இதனால் சக வீரர்கள் கோஹ்லி களத்தில் இருப்பதை போன்றே உணர்ந்து உத்வேகம் அடைகிறார்கள்.
Best moment of the day #kohli as water boy😍 #INDVSAUS pic.twitter.com/odG0wtZxk8
— ram (@sashi_sebastian) March 25, 2017
முதல் இன்னிங்சில் ஆஸ்திரேலியா 300 ரன்களுக்கு ஆல்-அவுட்டாகிவிட்டது குறிப்பிடத்தக்கது.