நான் மட்டும் இருந்திருந்தால்
நான் தேர்வுக் குழுத் தலைவராக இருந்திருந்தால் டி20, டெஸ்ட், ஒரு நாள் போட்டிகளுக்கான அணிகளுக்கு கோஹ்லியையே கேப்டனாக்கியிருப்பேன். அந்த மாதிரிதான் நான் யோசித்திருப்பேன்.
சிந்திச்சுப் பாருங்க
இதுகுறித்து சிந்திக்க வேண்டிய நேரம் வந்து விட்டது. கோஹ்லி அனைத்து வகையான அணிகளுக்கும் கேப்டனாக நியமிக்கப்பட வேண்டும். அடுத்த உலகக் கோப்பை 2019ல்தான் வருகிறது. இடையில் பெரிய தொடர்கள் எதுவும் இல்லை. எனவே இதுதான் சரியான நேரமாகும்.
அணியை சரியாக கட்டமைக்கலாம்
அடுத்த உலகக் கோப்பைக்கு முன்பாக நமக்கு நிறைய காலம் உள்ளதால், கோஹ்லியை கேப்டனாக்கி உலகக் கோப்பைக்கு ஏற்ற வலுவான அணியை கட்டமைக்க இது நமக்கு நல்ல வாய்ப்பாகும்.
ஜாலியாக விளையாடட்டும்
டோணி ஒரு வீரராக ஜாலியாக விளையாடட்டும். தனது விளையாட்டை எந்தவிதமான நெருக்கடியும் இல்லாமல் அவர் அனுபவித்த ஆட இது ஒரு நல்லவாய்ப்பு.
அருமையான வீரர்
டோணி ஒரு அருமையான வீரர். அவரது திறமையை யாரும் பறித்து விட முடியாது. அந்த திறமையான ஆட்டத்தை முழுமையான முறையில் ரசித்துப் பார்க்க அவரிடமிருந்து கேப்டன் பதவியை எடுக்க வேண்டும். அவரும் அப்போதுதான் ரசித்து விளையாட வாய்ப்பு கிடைக்கும்.
வேற வழியில்லை
முடிவெடுப்பது கஷ்டம்தான். ஆனால் வேறு வழியில்லை. முடிவெடுக்காவிட்டால் அது சிக்கலில்தான் போய் பின்னர் முடியும். இப்போது முடிவெடுப்பதே சரியானதாக இருக்க முடியும்.
ஆஸ்திரலியாவைப் பாருங்கள்
ஆஸ்திரேலியாவில் ஸ்டீவ் வாக் நல்ல பார்மில் இருந்தபோதுதான் ரிக்கி பான்டிங் கண்டுபிடிக்கப்பட்டார். அவருக்கு அடுத்து மைக்கேல் கிளர்க் வந்தார். இப்போது ஸ்டீவ் ஸ்மித் இருக்கிறார். இதேபோல நமது அணியிலும் கேப்டன் மாற்றம் சீரிய முறையில் இருக்க வேண்டியது அவசியம் என்றார் சாஸ்திரி.