For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

புவனேஸ்வர் குமார் புயல் வேக பந்து வீச்சுக்கு பணிந்த நியூசிலாந்து.. முதல் இன்னிங்சில் திணறல்

By Veera Kumar

கொல்கத்தா: இந்தியா-நியூசிலாந்துக்கு எதிரான 2வது டெஸ்டின் முதல் இன்னிங்சில் நியூசிலாந்து அணி ரன் குவிக்க திணறி வருகிறது. இந்திய வேகப்பந்து வீச்சாளர் புவனேஸ்வர்குமார் 5 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்.

கான்பூரில் நடைபெற்ற, சிறப்புமிக்க, இந்தியாவின் 500வது டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்தை இந்தியா வீழ்த்தியது. 2வது டெஸ்ட் போட்டி கொல்கத்தாவில் தொடங்கியுள்ள நிலையில், முதலில் பேட் செய்த இந்திய அணி 316 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது.

Kolkata Test: Bhuvneshwar claims five-for as New Zealand reduced to 128/7

இதையடுத்து நியூசிலாந்து 2வது இன்னிங்சை தொடங்கியது. நடுவே மழை குறுக்கிட்டதால் ஆட்டம் பல நிமிட நேரம் தடைபட்டது. இன்றைய ஆட்ட நேர இறுதியில் நியூசிலாந்து அணி 7 விக்கெட்டுகளை இழந்து 128 ரன்களை எடுத்து திணறிக்கொண்டுள்ளது. இதில் 5 விக்கெட்டுகளை புவனேஸ்வர்குமார் வீழ்த்தினார்.

தற்போதைய நிலையில், முதல் இன்னிங்சில், இந்தியாவைவிட 188 ரன்கள் பின்தங்கியுள்ளது நியூசிலாந்து. 10 ஓவர்கள் வீசிய அவர் 33 ரன்கள் விட்டுக்கொடுத்து 5 விக்கெட்டுகளை கைப்பற்றினார். புவனேஸ்வர் குமாரின் பந்துகள் லாவகமாக இருபுறமும் ஸ்விங் ஆனது.

Story first published: Saturday, October 1, 2016, 17:49 [IST]
Other articles published on Oct 1, 2016
English summary
India are in commanding position after its bowlers pushed New Zealand on the back foot by taking four wickets on day two of the second Test match here on Saturday (Oct 1).
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X