டோணி
ஸ்டைரிஸ் கூறுகையில் "எனக்கு பிடித்த கேப்டன்களில் டோணியும், ஸ்டீபன் பிளம்மிங்கும் அடங்குவார்கள். கேப்டன் பதவியில் இருவரும் மாறுபட்ட வகையில் செயல்படுவார்கள்.
பிளம்மிங்
பிளம்மிங் மிகவும் புத்திசாலி. அவர் சொல்வதை கட்டாயம் நாம் செய்தாக வேண்டும். டோணி மிகவும் அமைதியான கேப்டன். ஆனால், இளம் வீரர்களின் கருத்தைக்கூட அவர் கேட்டறிவார்.
கருத்து கேட்பு
இது எனக்கு ரொம்பப் பிடித்த விஷயம். நீங்கள் ஐந்து போட்டிகளில் மட்டுமே விளையாடிய நபராக இருந்தாலும், 19 வயதிற்குட்பட்ட வயதில் இருந்தாலும், ஒவ்வொருவரின் கருத்தையும் டோணி கேட்டறிவார்.
அதிகாலை 3 மணிக்கும் கூட...
அப்படித்தான் ஒரு சமயம் நாங்கள் ஐ.பி.எல். தொடரில் விளையாடிய போது, நடைபெற்ற ஒரு சம்பவத்தை உங்களிடம் ஷேர் பண்ணிக்கிறேன். கேப்டன் டோணியின் அறை அதிகாலை 3 மணி வரைக்கும் திறந்திருக்கும். யாராக இருந்தாலும் அவருடன் ஒரு கப் காஃபி குடித்துக்கொண்டு கருத்துக்களை பேசி கலந்துரையாடலாம்." என்கிறார்.