ஹைதராபாத்: 1990களில் இந்திய கிரிக்கெட்டை கலக்கிய சச்சின், கங்குலி, சேவாக், வி.வி.எஸ்.லட்சுமணன் உள்ளிட்ட ஜாம்பவான் கிரிக்கெட் வீரர்களுக்கு ஐபிஎல் தொடக்க விழாவில் மரியாதை கொடுக்கப்பட்டது.
10வது ஐபிஎல் கிரிக்கெட் போட்டி இன்று ஹைதராபாத்தில் தொடங்கியது. தொடக்க விழாவின்போது சச்சின் டெண்டுல்கர், கங்குலி, சேவாக், லட்சுமணன் ஆகியோர் மைதானத்திற்கு வரவழைக்கப்பட்டு நினைவுப் பரிசு வழங்கப்பட்டது.
அப்போது பேசிய சச்சின், 2008ல் ஐபிஎல் தொடங்கியபோது இவ்வளவு பெரிய தொடராக இது உருமாறும் என தான் நினைக்கவில்லை என்றார். 20 ஓவர் கிரிக்கெட் தொடர் ஒன்று தொடர்ச்சியாக 10 ஆண்டுகளாக ஆடப்பட்டு வருவது என்பது மிகப்பெரிய சாதனை என்றும் அவர் குறிப்பிட்டார்.
அனைத்து டீம்களுமே சரியான பேலன்ஸ்சுடன் இருப்பதாகவும், எந்த அணி சிறப்பாக அதை பயன்படுத்துமோ, அந்த அணி வெற்றி பெறும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
Did you hear the voice of people when ravi sashtri utters #sachin name.. sachinnnn sachinnnn....
— Mohammed Ibrahim (@Raees_01) April 5, 2017
Thats sachin for u ❤ @sachin_rt bhaji 🙏😍 pic.twitter.com/h3gOb2etjZ