கோஹ்லிக்கு கேள்வி
நிருபரின் அந்த கேள்வி, இதுதான்: இப்போதுள்ள சூழ்நிலையை மனதில் வைத்துக்கொண்டு, பாகிஸ்தானுடன் ஆடுவது சரியான சாய்சாக இருக்குமா? என்பதே நிருபரின் கேள்வி. ஐபிஎல் தொடரில் கோஹ்லி சிறப்பாக ஆடாத நிலையில் இவ்வாறு நிருபர் கேள்வி எழுப்பினார்.
கோஹ்லி கோபம்
இதற்கு கோகபத்தோடு எதிர்கேள்வி கேட்டார் கோஹ்லி. நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? என்றார் அவர். உங்களது கருத்தை அறிந்துகொள்ள விரும்புகிறோம் என நிருபர் பதில் அளித்தார்.
நீங்களே முடிவு செய்துவிட்டீர்கள்
நான் என்ன நினைக்கிறேன் என்பது இதில் விஷயமே இல்லை. ஏனெனில் நீங்கள் ஏற்கனவே ஒரு கருத்துக்கு வந்துவிட்டீர்கள். இவ்வாறு கோஹ்லி கூறிவிட்டு அடுத்த கேள்விக்கு சென்றார் கோஹ்லி.
இந்தியா-பாகிஸ்தான்
இந்தியா-பாகிஸ்தான் நாடுகள் ஜூன் 4ம் தேதி எட்ஜ்பஸ்டனில் நடைபெற உள்ள கிரிக்கெட் போட்டியில் சந்திக்க உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.