வீரர்கள் ஏலம்
9வது ஐபிஎல் வீரர்கள் ஏலம் நேற்று பெங்களூரில் நடந்தது. அதில் பல முன்ணி வீரர்களை யாரும் ஏலம் எடுக்காத அவல நிலை ஏற்பட்டது.
16 இலங்கை வீரர்கள்
இந்த ஏலத்தில் இலங்கையைச் சேர்ந்த 16 வீரர்களின் பெயர்களும் இடம் பெற்றிருந்தது. திசரா பெரைரா, மஹளா ஜெயவர்த்தனே, லஹிரு திரிமன்னே, நுவன் குலசேகரா, அஜந்தா மெண்டிஸ், சசித்ரா சேனநாயகே, துஷ்மந்தா சமீரா, டிஎம். தில்ஷன், ஜீவன் மெண்டிஸ், தில்ருவன் பெரரா, ஷேஹன் ஜெயசூர்யா, தாசன் சனகா, மிலிந்தா சிரவர்தனா, இசுரு உதனா, தில்ஷன் முனவீரா, சீகுகே பிரசன்னா ஆகியோரே அவர்கள்.
திசராவுக்கு மட்டும் வாய்ப்பு
இதில் திசராவை மட்டும் டோணி தலைமையிலான ரைசிங் புனே சூப்பர்ஜெயன்ட்ஸ் அணி ரூ. 1 கோடிக்கு ஏலத்தில் ஏடுத்தது.
மற்றவர்களுக்கு டாட்டா
மற்ற 15 வீரர்களையும் யாரும் எடுக்க முன்வரவில்லை. இதனால் இந்த 15 பேரும் இந்த ஆண்டு ஐபிஎல் போட்டியில் விளையாட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.