2006 முதல்
2006ம் ஆண்டு முதல், இந்திய கிரிக்கெட் அணிக்கு, கிட் ஸ்பான்சராக நைக் உள்ளது. வரும், 2020ம் ஆண்டு வரையிலான ஒப்பந்தம், கடந்த ஆண்டு செய்யப்பட்டது. அப்போது, கிரிக்கெட் வாரியத்துக்கு, நைக், ரூ.370 கோடி ரூபாய் தந்துள்ளது.
பணம் ஏராளம்
மேலும், 2020ம் ஆண்டு வரை, ஒவ்வொரு போட்டிக்கும், ரூ,87,34,000ஐ, நைக் தரும். ஆனால், நைக் வழங்கும் கிட்கள் மோசமானதாக, தரமில்லாமல் உள்ளதாக, வீரர்கள் புகார் கூறியுள்ளனர்.
கேவலமா இருக்கு பாஸ்
பி.சி.சி.ஐ.,யை நிர்வகித்து வரும், சுப்ரீம் கோர்ட் நியமித்துள்ள நிர்வாகக் குழுவுக்கு இது தெரிவிக்கப்பட்டுள்ளது. வரும் வாரத்தில், நைக் நிறுவனத்துடன் பேச உள்ளதாக நிர்வாகக் குழு தலைவர் வினோத் ராய் கூறியுள்ளார்.
பணக்கார விளையாட்டுக்கு இது தேவையா
இந்தியாவின் பணக்கார விளையாட்டு கிரிக்கெட். பெரும் பணக்காரர்கள் ஆடும் போட்டி இது. இப்படியாப்பட்ட வீரர்களுக்கு ஏன் நைக் இப்படி ஒரு குடைச்சலைக் கொடுக்கிறதோ.
இந்திய வீரர்களின் மானத்தை காப்பாற்றுமா நைக்!