சுருண்ட இந்தியா
இதையடுத்து இந்தியா தனது முதல் இன்னிங்சை தொடங்கி ஆடியது. 40.1 ஓவர்கள் மட்டுமே தாக்குப்பிடித்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 105 ரன்கள் எடுத்தது. அதிலும் கடைசி 48 பந்துகளில் 7 விக்கெட்டுகளை இழந்து மோசமான வீழ்ச்சியை சந்தித்தது இந்தியா.
கடைசியில் சொதப்பல்
சரியாக சொல்லப்போனால், 94 ரன்களுக்கு 4 விக்கெட்டுகள் என்ற நிலையில் இருந்த இந்தியா 105 ரன்களுக்கு ஆல்-அவுட்டானது கொடுமை. 95 ரன்னிலேயே 5, 6, 7 என மூன்று விக்கெட்டுகளை அடுத்தடுத்து இழந்தது இந்தியா. 98 ரன்களுக்கு 8வது விக்கெட்டையும், 101 ரன்களுக்கு 9வது விக்கெட்டையும் இழந்த இந்தியா, 105 ரன்களில் ஆல்அவுட்டானது.
கோஹ்லி டக்அவுட்
கோஹ்லி அபூர்வமாக இன்று டக்அவுட்டானார். ஸ்டார்க் பந்தில் கேட்ச் கொடுத்து அவர் அவுட்டானார். 2 பந்துகளை அவர் சந்தித்திருந்தார். டெஸ்ட் போட்டியில் கோஹ்லி டக்அவுட்டாவது இது 5வது முறையாகும்.
சுழற்பந்து
இதற்கு முக்கிய காரணம், ஆஸ்திரேலியாவின், இடது கை சுழற்பந்து வீச்சாளர் ஓ'கீபேதான். மொத்தம் 6 விக்கெட்டுகளை சாய்த்து அதிர்ச்சியளித்தார். முதலாவது நாள் முதலே சுழலுக்கு ஏற்ப செயல்பட்டது புனே பிட்ச். ஆஸ்திரேலியாவை சுழலில் சுருட்டும் வகையில் மைதானம் தயார் செய்யப்பட்டிருந்தது கண்கூடு. ஆனால், அது இந்தியாவுக்கே பிரச்சினையாக முடிந்துவிட்டது பெரும் சோகம்.