பெங்களூரு: ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு - சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் லீக் ஆட்டம் மழையினால் ஒரு பந்து கூட வீசப்படாமல் கைவிடப்பட்டது.
இந்தியாவின் பல்வேறு நகரங்களில் 10-வது ஐபிஎல் தொடரின் லீக் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இதில் பெங்களூருவில் இன்று நடைபெறவிருந்த 29-வது லீக் ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் பலப்பரீட்சை நடத்த இருந்தன.
இந்நிலையில், பெங்களூருவில் மழை பெய்து வந்ததால் போட்டி துவங்குவதில் தாமதம் ஏற்பட்டது. இருப்பினும் தொடர்ச்சியாக மழை பெய்த காரணத்தால் போட்டி ரத்து செய்யப்படுவதாக நடுவர்கள் அறிவித்தனர்.
போட்டி ரத்து செய்யப்பட்டதால் பெங்களூர் மற்றும் ஹைதராபாத் அணிகளுக்கு தலா ஒரு புள்ளி வழங்கப்பட்டுள்ளது. இதனால் பெங்களூர் அணி 5 புள்ளிகளுடன் கடைசி இடத்திலும், ஹைதராபாத் அணி 9 புள்ளிகளுடன் 3-வது இடத்திலும் உள்ளது.