தலைமை கோச் பணிக்கு...
இதைத் தொடர்ந்து பிசிசிஐ தலைமை கோச் பணிக்கான விண்ணப்பங்களை வரவேற்றது. அதில் வீரேந்திர ஷேவாக், டாம் மூடி, ரிச்சர்ட் பைபஸ், லால் சந்த் ராஜ்புட் உள்ளிட்டோர் விண்ணப்பித்துள்ளனர். இந்நிலையில் பிசிசிஐ-யின் முன்னாள் இயக்குநராக இருந்த ரவி சாஸ்திரி அப்பதவிக்கு கடந்த முறையே விண்ணப்பித்திருந்தார்.
|
தேர்வாக வில்லை
எனினும் அவரை கங்குலி உள்ளிட்ட கிரிக்கெட் வழிகாட்டுதல் குழுவினர் தேர்ந்தெடுக்காமல் கும்ப்ளேவை நியமித்தனர். தற்போது கும்ப்ளே விலகியதை தொடர்ந்து ரவி சாஸ்திரி அப்பதவிக்கு விண்ணப்பிக்க முடிவு செய்துள்ளதாக கடந்த செவ்வாய்க்கிழமை அன்று செய்திகள் வெளியாகின.
|
ரசிகர்கள் கருத்து
கிரிக்கெட் அணியின் தலைமை கோச்சாக ரவி சாஸ்திரி நியமிக்கப்பட்டால், அவர் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் போல் வாய்மூடி மௌனமாக இருப்பார் என்று ரசிகர்கள் ஒப்பிட்டுள்ளனர். கடந்த 10 ஆண்டுகளாக பிரதமராக இருந்த மன்மோகன் சிங் பல்வேறு விவகாரங்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்காமல் தன் பதவியை காத்து கொள்ள மௌனம் சாதித்து வந்தார் என்ற குற்றச்சாட்டு உள்ளது. மேலும் சில சீர்திருத்தங்களை செய்யவும் அவர் தவறிவிட்டதாக குற்றச்சாட்டுகள் உள்ளன.
|
சாஸ்திரிக்கு மறுப்பு
கடந்த ஆண்டு தலைமை கோச் பணிக்கு ரவி சாஸ்திரியை நியமிக்க வேண்டும் என்பது கோஹ்லியின் விருப்பம் என்பதை மறுப்பதற்கில்லை. அதனால்தான் பிசிசிஐ, கும்ப்ளேவை ஆதரித்தது. எனவே மன்மோகன் சிங்கை போல் ரவி சாஸ்திரியும் எந்த சீர்திருத்தங்களையும் செய்யாமல் மௌனமாக இருப்பார் என்று ரசிகர்கள் கருதுகின்றனர். மேலும் கோஹ்லி என்ற சோனியா காந்திக்கு ரவி சாஸ்திரி மன்மோகன் சிங்காக இருப்பார் என்றும் தெரிவித்துள்ளனர்.