சர்ச்சை
ரோகித் ஷர்மா 90 ரன்கள் விளாசியபோது அவர் கேட்ச் கொடுத்தார். ஆனால் அதை நோபால் என பாகிஸ்தானை சேர்ந்த அலீம் தார் அறிவித்தார். பவுலர் ருபெல் ஹொசைன் வீசிய அந்த பந்து ரோகித் ஷர்மா இடுப்பு உயரத்தை விட உயரமான ஃபுல்டாசாக வீசப்பட்டது என்பதால் நோபால் அறிவிக்கப்பட்டது. ஆனால் டிவி ரிப்ளேகளில் அது இடுப்பை விட உயரம் குறைந்த ஃபுல்டாஸ் என தெரிந்தது.
இந்தியா வெற்றி
இந்த போட்டியில் வங்கதேசம் 193 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. எனவே இந்தியா 109 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதில் ரோகித் ஷர்மா சதம் விளாசியதை போல இன்றைய மினி உலக கோப்பை அரையிறுதியிலும் சதம் விளாசியுள்ளார். இதிலும் வங்கதேசம் விரட்டியடிக்கப்பட்டுள்ளது.
ரோகித் சதங்கள்
இதன் மூலம், ரோகித் சர்வதேச அரங்கில் இரு இரட்டை சதங்கள் உட்பட 11 சதங்கள் விளாசியுள்ளார். அதில் 2 சதங்கள் வங்கதேசத்துக்கு எதிரானவை. அந்த இரண்டும் எவை என்பதைத்தான் மேலே நீங்கள் படித்தீர்கள். முக்கிய கட்டத்தில் வங்கதேசத்தை விரட்டியடிக்க அவரது சதங்கள் பயன்பட்டுள்ளன.
கியர் மாற்றம்
இன்றைய போட்டியில் ஆரம்பத்தில் நல்ல பந்துகளில் ரன் அடிக்காமலும், எளிதான பந்துகளை விரட்டியும் புத்திசாலித்தனமாக ஆடினார். பிறகு கியரை மாற்றி விளாசலை ஆரம்பித்தார் ரோகித் ஷர்மா.