டெல்லி: உலக கோப்பை அரையிறுதியில், ஆஸ்திரேலியாவிடம் இந்தியா பெற்ற தோல்வியையடுத்து இந்திய வீரர்களின் வீடுகளுக்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
லீக் போட்டிகளிலும், காலிறுதியிலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய அணி எந்த ஒரு போராட்டமும் இன்றி ஆஸ்திரேலியாவிடம் முற்றிலும் சரணடைந்து போனது இந்திய ரசிகர்களை அதிர்ச்சி அடைய வைத்தது.
4 முக்கிய விக்கெட்டுகளை இழந்ததுமே இந்திய ரசிகர்கள் நம்பிக்கை இழப்பில் இருந்தனர் அவர்களின் ஒரே நம்பிக்கை டோணியாக இருந்தது. டோணி அவுட் ஆனதும் அந்த நம்பபிக்கையும் அவர்களுக்கு போனது.
உத்தரபிரதேச மாநிலம் கான்பூரில் டிவி பார்த்து கொண்டு இருந்த ரசிகர்கள் ஆவேசம் அடைந்தனர்.அவர்களால் இந்தியாவின் தோல்வியை தாங்கி கொள்ள முடியவில்லை.அங்கிருந்த டிவியை அடித்து உடைத்தனர்.
கேப்டன் டோணியின் வீடு ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில் உள்ளது அங்கு அவரது வீட்டுக்கு போலீசார் பாதுகாப்பை அதிகரித்து உள்ளனர். அதுபோல் மும்பையில் உள்ள ரோகித் ஷர்மா வீட்டுக்கும் பாதுகாப்பு அதிகரிக்கபட்டு உள்ளது.