For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

ஸ்பின்னர்களுக்கு வந்த சோதனை.. மெண்டிஸ் உட்பட யாரையும் ஏலம் எடுக்க அணிகள் தயாரில்லை!

By Veera Kumar

பெங்களூர்: ஐபிஎல் ஏலத்தில், அஜந்தா மெண்டிஸ் உள்ளிட்ட எந்த ஒரு ஸ்பின் பந்து வீச்சாளரையும் ஏலத்தில் எடுக்க எந்த ஒரு அணியும் தயாராக இல்லாதது பவுலர்கள் வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

9-வது ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளுக்கான வீரர்கள் ஏலம் பெங்களூருவில் இன்று நடைபெற்றது.

Spinners are unsold in the IPL auction

பேட்ஸ்மேன், விக்கெட் கீப்பர், ஆல்-ரவுண்டர்கள், வேகப்பந்து வீச்சாளர்களுக்கான ஏலம் முடிந்ததும், சுழற் பந்து வீச்சாளர்கள் ஏலத்தில் விடப்படுவார்கள் என்று அறிவிப்பு வெளியானது.

ஆனால், இதில் கொடுமை என்னவெனில், ஸ்பின்னர்களை ஏலத்தில் எடுக்க எந்த அணியும் தயாராக இல்லை. கணிக்க முடியாத ஸ்பின் பவுலர் என்று வர்ணிக்கப்படும், இலங்கையின் அஜந்தா மெண்டிசை கூட எந்த அணியும் ஏலத்தில் எடுக்கவில்லை என்பது ஆச்சரியம் தந்தது.

ஏலத்திற்கு வந்து, கண்டுகொள்ளப்படாமல் விடப்பட்ட ஸ்பின்னர்கள் லிஸ்டை பாருங்கள்: சசித்ரா சேனநாயகே, வி.பெருமாள், நாதன் லியோன், தேவேந்திர பிஷு, மிக்கேல் பீர், அஜந்தா மெண்டிஸ், சுலைமான் பென், ராகுல் ஷர்மா, சாமுவேல் பத்ரி, பிரக்ஜான் ஓஜா, கேமரூன் போய்ஸ்.

Story first published: Saturday, February 6, 2016, 12:05 [IST]
Other articles published on Feb 6, 2016
English summary
Spinners including Ajantha Mendis and Cameron Boyce are unsold in the IPL auction.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X