டெல்லி: ஐ.பி.எல். பிக்ஸிங் வழக்கில் தாம் திகார் சிறையில் இருந்த போது தற்கொலை செய்துகொள்ள நினைத்தேன்; தற்போது வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டதைத் தொடர்ந்து வாழ்நாள் தடையை இந்திய கிரிக்கெட் வாரியம் நீக்கும் என்று ஸ்ரீசாந்த் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் அவர் நேற்று கூறியதாவது:
இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் செயலர் அனுராக் தாக்கூரை சந்திப்பதற்காக அனுமதி கோரியுள்ளேன். என் மீதான வாழ்நாள் தடையை நீக்குமாறு கோரி நான் விண்ணப்பிக்கலாம் என்று அவர் தொலைக்காட்சி ஒன்றில் தெரிவித்துள்ளார்.
இதனால் வாழ்நாள் தடையை நீக்க வேண்டும் என்ற எனது கோரிக்கை ஏற்கப்படும் என்று நம்புகிறேன். எனவே அதற்காக விண்ணப்பிக்க உள்ளேன்.
பிக்ஸிங் விவகாரத்தில் குற்றம்சாட்டப்பட்ட திகார் சிறையில் இருந்த போது நான் தற்கொலை செய்வது குறித்தெல்லாம் நான் சிந்தித்தது உண்டு. எனது குடும்பம் மற்றும் கடவுளின் ஆதரவால் அந்த எண்ணத்தை கடந்து வந்தேன்.
இவ்வாறு ஸ்ரீசாந்த் கூறினார்.