டிஆர்எஸ் சர்ச்சை
டிஆர்எஸ் முடிவை எடுப்பதற்காக பெவிலியனை நோக்கி திரும்பி பார்த்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது. இந்திய வீரர் முரளி விஜயை கெட்ட வார்த்தையில் திட்டியதும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
புகார் வாபஸ்
டிஆர்எஸ் பிரச்சினையில் ஸ்மித் மீது புகார் கொடுத்திருந்த பிசிசிஐ பிறகு அதை வாபஸ் பெற்று நட்பை தொடர சிக்னல் கொடுத்தது. ஆனால் முரளி விஜய் குறித்த ஆபாச பேச்சு குறித்து இன்னும் புகார் அளிக்கப்படவில்லை.
பீர் குடிக்கலாமா
4வது நாளான இன்றே ஆட்டம் முடிவடைந்துவிட்டதால் இரு அணி வீரர்களும் குளுமையான தரம்சாலாவிலேயே இன்று தங்கியுள்ளனர். இந்நிலையில் கடைசி டெஸ்ட் போட்டிக்கு இந்திய அணி கேப்டனாக செயல்பட்ட ரஹானேவிடம் அணுகிய ஸ்மித், உங்களோடு சேர்ந்து பீர் குடிக்க எங்கள் அணிக்கும் வாய்ப்பு கிடைக்குமா என கேட்டுள்ளார். இதை கேட்ட ரஹானே புன் சிரிப்புடன், கேட்டு சொல்கிறேன் என கூறினாராம்.
|
பத்திரிகையாளர் தகவல்
இதுகுறித்து ஆஸ்திரேலிய பத்திரிகையாளர் ஒருவரிடம் ஸ்மித் கூறியுள்ளார். அவர் இத்தகவலை டிவிட்டரில் வெளியிட்டதோடு செய்தியாக பதிவிட்டுள்ளார். இப்படித்தான் ஒரு கிரிக்கெட் தொடரை நட்போடு முடிக்க வேண்டும் எனவும் அந்த பத்திரிகையாளர் பாராட்டியுள்ளார்.