25 டீம் தேவை
10 அணிகள் போதும் என்ற முடிவை ஐசிசி மறு பரிசீலனை செய்ய வேண்டும். மாறாக 25 அணிகளை சேர்க்க முன்வர வேண்டும்.
ஏ அணிகளை அனபுப்புங்கள்
அசோசியேட் அணிகளுடன் மோத பெரிய அணிகள் தங்களது ஏ அணிகளை தொடர்ச்சியாக அனுப்பி விளையாடச் செய்ய வேண்டும். அப்போதுதான் அவர்களுக்கு அனுபவம் கிடைத்து அவர்களும் சிறப்பான அணிகளாக மாற முடியும்.
கிரிக்கெட் வளர வேண்டாமா
ஒரு கிரிக்கெட் வீரராக, உலகக் கோப்பைப் போட்டிக்கான அணிகள் சுருங்குவதை பார்த்து நான் வருத்தப்படுவேன். மாறாக கிரிக்கெட் மேலும் வளர அணிகளின் எண்ணிக்கையை அதிகரிப்பதுதான் சிறந்தது என்றார் சச்சின்.
14 டூ 10
தற்போது உலகக் கோப்பைப் போட்டியில் 14 அணிகள் பங்கேற்கின்றன. இதில் டெஸ்ட் போட்டிகளில் ஆடும் அணிகளைத் தவிர மற்றவை சாதாரண கத்துக்குட்டி அணிகளாகும். ஆப்கானிஸ்தான், ஸ்காட்லாந்து, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், அயர்லாந்து ஆகிய அந்த அணிகளை புரட்டி புரட்டி அடித்துத்தான் பெரிய அணிகள் உலக சாதனைகளைக் குவித்துக் கொண்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
சின்ன அணியாக இருந்தாலும்
டெண்டுல்கர் மேலும் கூறுகையில், சின்ன அணியாக இருந்தாலும் அவர்களும் சிறப்பாகவே ஆட முயற்சிக்கிறார்கள். ஏன் பெரிய அணிகளுக்கு அதிர்ச்சியும், ஆச்சரியமும் தரத் தவறுவதில்லை. இதை நாம் ஒவ்வொரு உலகக் கோப்பைப் போட்டியிலும் பார்த்து வருகிறோம். அவர்களுக்கு தொடர்ச்சியான வாய்ப்புகள் கிடைத்தால் நிச்சயம் அவர்களும் பெரிய அணியாக உருவெடுப்பார்கள்.
சச்சின் யோசனை மஞ்சுவாண்டுதான்...!