கொழும்பு: 17 வருடமாக இலங்கை அணியில் இடம் பிடித்திருந்த முன்னணி கிரிக்கெட் வீரர் திலகரத்னே தில்ஷன் ஓய்வை அறிவித்துள்ளார்.
சொந்த மண்ணில், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் இலங்கை பங்கேற்றுள்ளது. இரு அணிகளும் தலா 1 போட்டிகளில் வென்றுள்ள நிலையில், இன்னும் 3 போட்டிகள் எஞ்சியுள்ளன.
இப்போட்டி தொடர் முடிவடைந்ததும், ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் இருந்து ஓய்வு பெறப்போவதாக தில்ஷன் இன்று அறிவித்தார். 2013ல் இவர் டெஸ்ட் ஆட்டங்களில் இருந்து ஓய்வு பெற்றுவிட்டார். எனவே தில்ஷன் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து முற்றாக விடைபெற உள்ளார்.