கண்டி: இலங்கை சென்ற நடிகை அனுஷ்கா சர்மா இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் கோஹ்லியுடன் சேர்ந்து கண்டியில் மரம் நடும் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
கிரிக்கெட் போட்டிகளுக்காக கோஹ்லி தலைமையிலான இந்திய அணி வீரர்கள் இலங்கை சென்றுள்ளனர். கடந்த சில நாட்களுக்கு முன்னர் கோஹ்லியின் காதலி நடிகை அனுஷ்கா சர்மாவும் இலங்கை சென்றிருப்பதாக பாலிவுட் வட்டாரங்கள் தெரிவித்திருந்தன.
இதை உறுதிப்படுத்தும் வகையில் சமூக வலைதளங்களில் கோஹ்லியும் அனுஷ்கா சர்மாவும் இணைந்து இருக்கும் படங்கள் வெளியாகி உள்ளன. கோஹ்லியும் அனுஷ்காவும் கண்டியில் மரக் கன்று படம்தான் சமூக வலைதளங்களில் ஹிட்டடித்து வருகிறது.