டபுள் செஞ்சுரி
நேற்றைய போட்டியில் 200 ரன்களை தொட்ட நிலையில் கோஹ்லி அவுட் ஆனார். இதற்கு அவர் சந்தித்த பந்துகள் 281 மட்டுமே.
மண்ணுக்கு முத்தம்
இரட்டை சதம் விளாசியதும் ஹெல்மெட்டை கழற்றிய கோஹ்லி, ரசிகர்கள் கைதட்டல் பாராட்டை ஏற்றுக் கொண்டார். பின்னர் எதிர் முனையில் நின்ற அஸ்வினை கட்டிப்பிடித்துவிட்டு, சச்சினை போலவே, வானத்தை நோக்கி கடவுளுக்கு நன்றி சொன்னார். பிறகு, மண்டியிட்டு தரையில் முத்தமிட்டார்.
முதல் கேப்டன்
விராட் கோஹ்லிதான் வெளிநாட்டு மண்ணில் இரட்டை சதம் விளாசிய முதல் இந்திய கேப்டன் என்பது இதில் கூடுதல் சிறப்பாகும். மேலும், இது அவரின் முதலாவது டெஸ்ட் இரட்டை சதமாகும்.
84 வருட வரலாறு
84 வருட கால இந்திய டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் ஒரு கேப்டனும் வெளிநாட்டில் இரட்டை சதம் விளாசியது இல்லை என்பது இதில் ஆச்சரியம்தான்.
புஜாராவுக்கு பிறகு
2013ம் ஆண்டு மார்ச் மாதம், ஹைதராபாத்தில் ஆஸி.க்கு எதிரான டெஸ்ட் போட்டியில் புஜாரா இரட்டை சதம் விளாசினார். அதன்பிறகு, 3 வருடங்கள், 4 மாதங்களுக்கு பிறகு ஒரு இந்திய வீரர் இரட்டை சதம் விளாசியதும் குறிப்பிடத்தக்கது.