நான் குற்றமற்றவன்
என்னைப் பற்றி ஊடகங்களில் வந்த செய்தியால் எனது ரசிகர்கள் பெரும் கவலையடைந்துள்ளனர். அவர்களுக்கு நான் சொல்லிக் கொள்ள விரும்புவதெல்லாம் நான் ஒரு தவறும் செய்யவி்ல்லை. இதை திட்டவட்டமாக கூறிக் கொள்கிறேன்.
ஒழுங்கு தவறாதவன்
நான் ஒழுங்கு தவறாதவன். சரியான முறையிலேயே போட்டிகளை ஆடினேன். எந்தத் தவறையும் நான் செய்யவில்லை. தவறான எந்த வேலையிலும் நான் ஈடுபட்டதில்லை.
பொய்யானவை
என் மீதான அனைத்துப் புகார்களும் தவறானவை, பொய்யானவை. ஆதாரமில்லாதவை. கிரிக்கெட் விளையாடுவது எனது லட்சியம். எந்த அணிக்காக ஆடுகிறேனோ அந்த அணிக்காக அர்ப்பணிப்புடன் விளையாடுகிறேன்.
வழக்குத் தொடருவேன்
என்னைப் பற்றி கூறப்பட்ட புகார்கள் தொடர்பாக சட்டப்பூர்வமான நடவடிக்கை எடுப்பது குறித்து யோசித்து வருகிறேன். நிச்சயம் அதைச் செய்வேன் என்று ரெய்னா கூறியுள்ளார்.