டெல்லி: இலங்கை கிரிக்கெட் அணியுடனான, ஐந்து ஒரு நாள் போட்டிகளுக்கான இந்திய அணி, நாளை அறிவிக்கப்பட உள்ளது. இந்தப் போட்டித் தொடரில் பங்கேற்கப் போவதில்லை என்று கேப்டன் கோஹ்லி கூறியதாக தகவல்கள் பரவி வருவதால், அவர் விளையாடுவாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
இலங்கைக்கு சென்றுள்ள, இந்திய அணி, மூன்று டெஸ்ட் போட்டிகளில் விளையாடுகிறது. முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் வென்று, தொடரையும் வென்றுள்ளது. மூன்றாவது டெஸ்ட் போட்டி, பல்லேகலையில் இன்று துவங்கியுள்ளது.