பெங்களூர்: உலக கோப்பை கிரிக்கெட் இறுதி போட்டிக்கு முன்னேறியுள்ள இந்திய மகளிர் அணிக்கு ரொக்கப் பரிசை பிசிசிஐ அறிவித்துள்ளது.
20ம் தேதி நடைபெற்ற அரையிறுதி போட்டியில் பலம் வாய்ந்த ஆஸ்திரேலியாவை வீழ்த்திய இந்திய அணி, இறுதுி போட்டிக்கு தகுதி பெற்றது. 23ம் தேதி நடைபெறும் பைனல் போட்டியில், இங்கிலாந்தை, இந்தியா எதிர்கொள்கிறது.
இந்திய அணி 2வது முறையாக உலக கோப்பை பைனலுக்கு தகுதி பெற்றுள்ளது. இதையடுத்து, ஒவ்வொரு வீராங்கனைக்கும் தலா ரூ.50 லட்சம் மற்றும் உதவி பணியாளர்களுக்கு தலா ரூ.25 லட்சம் பரிசு வழங்கப்படும் என பிசிசிஐ அறிவித்துள்ளது.
2005ல் இந்திய அணி பைனலுக்கு சென்றபோது, ஆஸி. அணியிடம் தோல்வியடைந்து 2வது இடத்தை பிடிதத்தது குறிப்பிடத்தக்கது.