பெர்த் நகரில்
இந்தியா, ஐக்கிய அரபு அமீரக அணிகள் மோதும் ஆட்டம் வரும் 28ம் தேதி பெர்த் நகரில் நடைபெறுகிறது. இதையொட்டி இந்திய அணி திங்கட்கிழமை பெர்த் வந்தது.
பயிற்சியில் வீர்ர்கள்
வீரர்களின் பயிற்சியை கண்டு உற்சாகமடைந்த ரசிகர்கள் அவர்களுடன் ஒரு போட்டோ எடுத்துக்கொள்ள வேண்டும் என்று மணிக்கணக்கில் காத்திருந்தனர். ஆனால் டோணி தலைமையிலான வீரர்கள் ரசிகர்களை கண்டுகொள்ளவேயில்லையாம்.
மனம் நொந்த ரசிகர்கள்
இதனால் மனம் நொந்த ரசிகர்கள், நமது அணி வீரர்கள், எங்களின் சாதாரண கோரிக்கையைக் கூட ஏற்க மறுத்துவிட்டனர் என்று புலம்பி வருகின்றனர்.
கோரிக்கை மறுப்பு
பத்து முதல் 15 பேர்வரை காத்திருந்தும் எங்களின் கோரிக்கையை நிராகரித்து விட்டனர். ஆனாலும் இன்னும் இருதினங்கள் இருப்பதால் போட்டி தொடங்கும்முன்னர் போட்டோ எடுத்துவிடுவோம் என்று நம்பிக்கையுடன் காத்திருப்பதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.