டெல்லி: ரியோ ஒலிம்பிக் ஜிம்னாஸ்டிக் போட்டியில் 4வது இடம் பிடித்த தீபா கர்மாக்கருக்கு பரிசாக கிடைத்த பிஎம்டபிள்யூ காரை திருப்பித்தர முடிவு செய்துள்ளாராம்.
ரியோ ஒலிம்பிக் தொடரின், ஜிம்னாஸ்டிக் போட்டித்தொடரில் 4வது இடம் பிடித்தவர் தீபா கர்மாக்கர்.
பேட்மின்டனில் வெள்ளி பதக்கம் வென்ற பி.வி.சிந்து, மல்யுத்த வெண்கல பதக்க வீராங்கனை சாக்ஷி மாலிக் போலவே தீபா கர்மாக்கருக்கும், இந்திய ரசிகர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
ஹைதராபாத் பேட்மின்டன் அசோசியேஷன் தலைவர் சாமுண்டேஷ்வரநாத், இவர்களுக்கு விலை உயர்ந்த பிஎம்டபிள்யூ காரை பரிசளித்தார்.
இதை சச்சின் டெண்டுல்கர் தனது கரங்களால் பரிசளித்தார். இந்நிலையில், பிஎம்டபிள்யூ காரை திருப்பி வழங்க தீபா கர்மாக்கர் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
இதற்கான உரிய காரணத்தை அவர் தெரிவிக்கவில்லை. ஆனால் அவரது பெற்றோரோ, சொந்த ஊரான அகர்த்தலா (திரிபுரா) போன்ற சிறிய நகரில் பிஎம்டபிள்யூ கார் என்பது சரிவராது. மேலும், அதை பராமரிப்பதும் கஷ்டம் என கூறியுள்ளனர். ஆனால் உண்மையான காரணம் என்ன என்பது குறித்து தெரியவில்லை.