For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கர்நாடகாவை சேர்ந்த வெள்ளி வாங்கிய பெண்ணாம்... சிந்து பெயரை மறந்த ஹரியானா முதல்வர்!

By Veera Kumar

சண்டீகர்: சாக்ஷி மாலிக்கிற்கு நடந்த பாராட்டு விழாவின்போது, பி.வி.சிந்து பெயரை மறந்ததோடு, அவரை கர்நாடகாவை சேர்ந்த வீராங்கனை என கூறியுள்ளார் ஹரியானா முதல்வர் மனோகர் லால் கட்டார்.

ஹரியானாவை சேர்ந்த சாக்ஷி மாலிக், சமீபத்தில் நிறைவடைந்த ரியோ ஒலிம்பிக், மல்யுத்தத்தில் வெண்கல பதக்கம் வென்றார். சொந்த ஊர் திரும்பிய சாக்ஷிக்கு இன்று பாராட்டு விழா நடந்தது. அதில் பங்கேற்ற முதல்வர் மனோகர் லால் கட்டார், சாக்ஷிக்கு ரூ.2.5 கோடி பரிசு வழங்கினார்.

Haryana CM forgets PV Sindhu's name and state

விழாவில் மனோகர் கட்டார் பேசுகையில், பேட்மின்டனில் வெள்ளி வென்ற சிந்து பெயரை குறிப்பிட நினைத்தார். ஆனால் பெயர் மறந்துவிட்டது. எனவே, கர்நாடகாவை சேர்ந்த வெள்ளி வென்ற வீராங்கனைக்கும் வாழ்த்து என எதையோ கூறி சமாளித்தார்.

உண்மையில், சிந்து, ஹைதராபாத்தை சேர்ந்தவர். எனவே அவர் தெலுங்கானாவுக்கு சொந்தமா, ஆந்திராவுக்கு சொந்தமா என இரு மாநிலத்தவர்களும் அடித்துக்கொள்கிறார்கள். இதில் ஹரியானா முதல்வர் புது பஞ்சாயத்தாக கர்நாடகாவையும் இழுத்துவிட்டுள்ளார்.

மத்திய விளையாட்டு துறை அமைச்சர் விஜய் கோயல், ஜிம்னாஸ்டிக் வீராங்கனை தீபா கர்மாகர் பெயரை தவறாக உச்சரித்து சர்ச்சையில் சிக்கியது நினைவிருக்கலாம்.

Story first published: Wednesday, August 24, 2016, 15:30 [IST]
Other articles published on Aug 24, 2016
English summary
The Haryana government arranged a grand felicitation ceremony for Sakshi Malik with the Chief Minister Manohar Lal Khattar handing a cash reward of Rs 2.5 crore to the Rio medallist.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X