ரியாத்: ரிலையன்ஸ் கம்யூனிகேஷனோடு இணைந்து ஐசிசி தயாரித்த புதிய அப்ளிகேஷன் ஒன்றை வெளியிட்டுள்ளது. இது ஐசிசி உலகக்கோப்பை 2015 தொடர்பானது.
அடுத்த மாதம் 14ம் தேதி ஐசிசி உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி தொடங்குகிறது. இதில் 14 அணிகள் இடம் பெறுகின்றன.
இந்நிலையில், புதிய அப்ளிகேஷன் ஒன்றைத் தயாரித்துள்ளது ஐசிசி. இதன் மூலம் ஐசிசி உலகக் கோப்பை தொடர்பான தகவல்களை உடனுக்குடன் உலகின் எந்த மூலையில் இருந்தும் தெரிந்து கொள்ள இயலும்.
அப்ளிகேஷன் ஸ்டோர் மற்றும் கூகுள் பிளே மூலம் இந்த அப்ளிகேஷனை இலவசமாக டவுன்லோட் செய்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
போட்டி நடைபெறும் ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்தில் உள்ள மைதானத்திலிருந்தும், உலகின் பிற பகுதிகளிலிருந்தும் இந்த தகவல்களைப் பெற முடியும். ஸ்மார்ட் போன்கள் மற்றும் டேப்லெட் மூலம் இதைப் பெறலாம்.
போட்டிகளை முழுமையாக ரசிக்க இந்த ஆப் உதவியாக இருக்கும் என்றும் ஐசிசி கூறியுள்ளது.