சூரத்: அஸாருதீன் குறித்து என்னிடம் திரும்பத் திரும்பக் கேட்காதீர்கள். அது வெறும் வதந்தி. எத்தனை தடவை நான் இதையே சொல்வது என்று தன்னிடம் அஸாருதீன் குறித்து கேட்ட செய்தியாளர்களிடம் கோபத்தைக் காட்டினார் பிரபல பேட்மிண்டன் வீராங்கனை ஜுவாலா கட்டா.
பிரபல பேட்மிண்டன் வீராங்கனை ஜுவாலா கட்டாவையும், முன்னாள் கிரிக்கெட் கேப்டன் அஸாருதீனையும் இணைத்துப் பேசி நீண்ட காலமாகவே வதந்தி இருந்து வருகிறது. இதை இருவரும் தொடர்ந்து மறுத்தும் வருகின்றனர்.
இந்த நிலையில் சூரத் வந்த ஜுவாலா கட்டா அங்கு ஒரு விளையாட்டு வளாகத்தைத் தொடங்கி வைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது செய்தியாளர்கள் சிலர், அஸாருதீனுக்கும் உங்களுக்கும் என்ன உறவு என்று கேட்டதும் கோபமடைந்தார் ஜுவாலா கட்டா.
உடனடியாக அவர், இது வதந்தி என்று எத்தனை தடவைதான் சொல்வது. ஏன் மீண்டும் மீண்டும் அதையே கேட்கிறீர்கள். கடந்த காலத்தில் சொன்ன பதில்தான் இப்போதும், எப்போதும். மீண்டும் அதையே கேட்காதீர்கள் என்றார் கோபமாக.
அஸாருதீன் சுயசரிதையை அடிப்படையாகக் கொண்ட அஸார் என்ற திரைப்படம் விரைவில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.