ஜெய்ப்பூர்: டெஸ்ட் போட்டிகளில் விராட் கோஹ்லின் செயல்பாடு குறித்து அதற்குள் டோணியுடன் ஒப்பிட வேண்டாம் என்று இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கபில் தேவ் கருத்து தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வரும் தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி, இந்தியாவுக்கு எதிரான 20 ஓவர் போட்டி தொடரை 2-0 என்ற கணக்கிலும், ஒருநாள் போட்டி தொடரை 3-2 என்ற கணக்கிலும் வென்றது.
இந்த நிலையில் இந்தியா- தென் ஆப்பிரிக்கா அணிகள் இடையேயான 4 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் போட்டி தொடரில் முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி மொகாலியில் நாளை தொடங்குகிறது. இந்த போட்டியில் விராட் கோஹ்லி தலைமையிலான இந்திய அணி களம் இறங்க உள்ளது.
இந்நிலையில், விராட் கோஹ்லி சிறந்த பேட்ஸ்மேனாகவும், அதேவேளையில் சிறந்த கேப்டனாகவும் செயல்படுவார் என்று கபில் தேவ் தெரிவித்துள்ளார். கோஹ்லி டெஸ்ட் அணிக்கு கேப்டன் பொறுப்பேற்று சில போட்டிகளே ஆகின்ற நிலையில், அதற்குள் டோணியுடன் ஒப்பிட வேண்டாம் என்றும் அவர் தெரிவித்தார்.