சகாப்தம்
டோணி ஒரு சகாப்தம். மாபெரும் வீரர். நான் பார்த்த வீரர்களிலேயே சிறந்தவர்.
ரொம்பப் பெருமையா இருக்கு தம்பி
அவருடன் இணைந்து செயல்படுவது எனக்குப் பெருமையாக உள்ளது.
வெல்லாதது என்ன இருக்கு
டோணி அனைத்து முக்கியக் கோப்பைகளையும் வென்று விட்டார். டுவென்டி 20 உலகக் கோப்பை, ஒரு நாள் போட்டி உலகக் கோப்பை, ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி என அனைத்தையும் வென்றுள்ளார்.
இந்தியா சிமென்ட்ஸும்தான்
இந்திய கிரிக்கெட்டுக்கு என்னுடைய இந்தியா சிமென்ட்ஸ் நிறுவனம் நிறையச் செய்துள்ளது.
வேலை போட்டுக் கொடுத்திருக்கோம்
எனது நிறுவனத்தில் பல கிரிக்கெட் வீரர்களுக்கு வேலை கொடுக்கப்பட்டுள்ளது. ஒட்டுமொத்த தமிழக கிரிக்கெட் அணியே இந்தியா சிமென்ட்ஸின் ஒரு அங்கமாக இருந்த காலமும் உண்டு என்றார் சீனிவாசன்.
கேஸ் இன்னும் முடியலை பாஸ்!
2013ம் ஆண்டு ஐபிஎல் தொடரில் நடந்த பெரும் பிக்ஸிங் ஊழலில் சிக்கி கிரிக்கெட் வாரியத் தலைவர் பதவியிலிருந்து உச்சநீதிமன்றத்தால் ஓரம் கட்டப்பட்டவர் சீனிவாசன். மேலும் இந்த பிக்ஸிங் விவகாரத்தில் நீதிபதி முகுல் முத்கல் கமிட்டியால் விசாரிக்கப்பட்ட 13 பேரில் சீனியும் ஒருவர். இந்த கமிட்டியின் இறுதி அறிக்கை ஓரிரு நாளில் சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்யப்படவுள்ளது.
தொடர முடியுமா
நவம்பர் 10ம் தேதி இந்த வழக்கில் தீர்ப்பளி்க்கவுள்ளது உச்சநீதிமன்றம். அதன் பிறகே இந்திய கிரிக்கெட் வாரியத் தலைவர் பதவியை சீனிவாசன் மீண்டும் பெற முடியுமா என்பது தெரிய வரும்.