லக்னோ: புரோ கபடி லீக் போட்டியில் நேற்று இரவு நடந்த ஆட்டத்தில், துவக்கத்தில் இருந்து உத்தர பிரதேச அணி முன்னணியில் இருந்தாலும், காயம் காரணமாக கடந்த போட்டியில் விளையாட முடியாத ஷபீர் பாப்பு அபாரமாக விளையாடி, மும்பைக்கு மற்றொரு வெற்றியை உறுதி செய்தார்.
புரோ கபடி லீக் 5வது சீசன் போட்டிகள் நடந்து வருகின்றன. 12 அணிகள், இரண்டு மண்டலங்களாக பிரிக்கப்பட்டுள்ளன. இதில் மண்டலங்களுக்கு இடையேயான போட்டிகள், கடந்த வாரம் முழுவதும் குஜராத்தின் அகமதாபாத்தில் நடந்தது.