ஹைதராபாத்: புரோ கபடி லீக்கில் நடப்பு சாம்பியன் பாட்னா பைரேட்ஸ் வெற்றியோடு அடியெடுத்து வைத்துள்ளது. தெலுங்கு டைட்டன்ஸ் அணியை 35-29 என்ற கணக்கில் இன்று நடைபெற்ற போட்டியில் தோற்கடித்தது பாட்னா அணி.
கேப்டனும், ரைடருமான பர்தீப் நர்வால் 15 ரைடிங் பாயிண்டுகளை பெற்றுக்கொடுத்து பாட்னா அணி வெற்றிக்கு பக்கபலமாக இருந்தார். மற்ரொரு ரைடர் மவ்னோ கோயட், 8 புள்ளிகளை பெற்றுக்கொடுத்து அணிக்கு உதவினார்.
தெலுங்கு அணியை பொறுத்தளவில் ராகுல் சவுத்ரி 7 புள்ளிகளை பெற்றுக்கொடுத்தார். நிலேஷ் சலுன்கே 6 புள்ளிகளை பெற்றுக்கொடுத்தார். நடப்பு சாம்பியனான நாங்கள் வெற்றியோடு தொடரை தொடங்கியுள்ளோம் என பாட்னா அணி டிவிட் செய்துள்ளது.