சென்னை: ஒலிம்பிக் போட்டியில் பேட்மின்டன் வீராங்கனை சிந்துவுக்கு எளிதில் வெள்ளிப் பதக்கம் கிடைத்துவிடவில்லை.
ரியோடிஜெனீரோ நகரில் நடந்த ஒலிம்பிக் போட்டியில் பேட்மின்டன் வீராங்கனை பி.வி. சிந்து வெள்ளிப் பதக்கம் வென்று இந்தியாவுக்கு பெருமை தேடித் தந்தார். அமைதியின் உருவமான சிந்து பதக்கம் வெல்ல தீவிர பயிற்சி எடுத்துள்ளார்.
இந்தியாவே கொண்டாடும் சில்வர் ஸ்டார் சிந்துவின் சில புகைப்படங்கள் ஃபேஸ்புக்கில் பலரையும் கவர்ந்துள்ளன. அதை நீங்களும் பார்த்து ரசிக்கலாமே.
சிந்து
சிந்துவின் இரு கால்களும் கட்டப்பட்டு தொங்கிக் கொண்டிருப்பதை பார்த்தால் நமக்கு கால் வலிக்கிறது. அவர் என்னமோ சந்தோஷமாக சிரித்து நம்மையும் சிரிக்க வைக்கிறார். இப்படி எல்லாம் அவர் வியர்க்க விறுவிறுக்க பயிற்சி எடுத்தனதால் தான் இன்று நாம் பெருமையடைந்துள்ளோம்.
ஹோம்லி
குடும்பத்தாருடன் சிரித்த முகமாய் நிற்கிறார் சிந்து. இந்த புகைப்படத்தை பார்த்தால் இவரா ஆக்ரோஷமாக பேட்மின்டன் விளையாடியது என்று எண்ணத் தோன்றுகிறது.
கோபிசந்த்
ரியோடிஜெனீரோவில் இருந்து நாடு திரும்பியபோது பதக்கம் வென்ற சாக்ஷி மாலிக், சிந்து மற்றும் அவரின் பயிற்சியாளர் கோபிசந்த் பெருமைபொங்க புன்னகை செய்கிறார்கள்.
இவரும் சிந்துவே
சுடிதார் அணிந்து ஹோம்லி கேர்ளாக புன்னை செய்கிறார் சிந்து. அப்படியும் இருப்பேன் இப்படியும் இருப்பேன்ல...
சிம்பிள்
சிம்பிளாக இருக்கும் சிந்துவின் புன்னகையில் தான் எத்தனை அழகு. நீங்கள் வெற்றி மேல் வெற்றி பெற வாழ்த்துக்கள் ராச்சாத்தி.