கொல்கத்தா: இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனான சவுரவ் கங்குலி இருந்த போது நிகழ்ந்த சம்பவங்களைத் தொகுத்து ஒரு புதிய புத்தகம் வெளியாக இருக்கிறது.
சவுரவ் கங்குலியின் தீவிர ரசிகரான கொல்கத்தாவைச் சேர்ந்த சப்தரஷி சர்கார் "Sourav Ganguly: Cricket, Captaincy and Controversy" என்ற தலைப்பில் புத்தகம் எழுதியுள்ளார். இந்த நூல் குறித்து சர்கார் கூறியதாவது:
நாங்கள் welovesourav.com என்ற இணையதளத்தின் மூலமாக கங்குலி தொடர்பான சுவாரசியமான தகவல்களை பதிவு செய்தோம். இவற்றை படித்த நண்பர்கள் கங்குலியைப் பற்றி புத்தகமாக வெளியிடுங்கள் என்றனர்.. தற்போது போதுமான தகவல்கள் கிடைத்ததால் புத்தகமாக வெளியிடுகிறோம் என்றார்.
இந்த புத்தகத்தில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் பயிற்சியாளர் கிரேக் சப்பல்- கங்குலி இடையேயான மோதல்கள் குறித்த தகவல்களும் இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.