நேரில் ஆய்வு...
இந்நிலையில், ஒலிம்பிக் போட்டிக்கான இந்திய குழுவின் தலைவர் ராகேஷ்குப்தா நேற்று ஒலிம்பிக் கிராமத்திற்கு நேரில் சென்று சர்வதேச ஒலிம்பிக் கவுன்சில் தலைவர் தாமஸ் பாச்சை சந்தித்தார். இந்திய வீரர்கள் தங்க இருக்கும் அறைகளையும் அப்போது அவர் பார்வையிட்டார்.
சைவ உணவுகள்...
அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய ராகேஷ் குப்தா, "ஒலிம்பிக் கிராமத்தில் நிறைய சைவ உணவுகள் வழங்கப்படுகிறது. வீரர்களின் வருகை அதிகரிக்கும் என்பதால், அடுத்த சில தினங்களில் கூடுதல் உணவு வகைகள் சேர்க்கப்படும் என்று எதிர்பார்க்கிறோம்.
கடைசி கட்ட பணிகள்...
தங்கும் அறைகள் நன்றாக இருக்கிறது. ஆனாலும் கடைசி கட்ட சில பணிகள் நடந்து கொண்டிருக்கின்றன. ஓரிரு தினங்களில் அப்பணிகள் முடிவடைந்து விடும் என்று எதிர்பார்க்கிறோம்.
அருமை...
இந்திய வீரர்களின் குடியிருப்புக்கு அடுத்து பிரேசில் வீரர்களின் தங்குமிடம் வருகிறது. இங்கு செய்யப்பட்டுள்ள வசதி வாய்ப்புகள் அருமையாக உள்ளன" எனத் தெரிவித்துள்ளார்.
ஆஸ்திரேலியா அதிருப்தி..
சமீபத்தில் ஆஸ்திரேலிய குழு ஒலிம்பிக் கிராமத்தில் வசதிகள் சரியில்லை என்று கூறி அதிருப்தி தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.