டெல்லி: ரியோவில் நடந்த ஒலிம்பிக் போட்டிகளில் இந்தியா தங்கம் வெல்லவில்லை என்று புலம்பினால் விளையாட்டுத்துறை இப்படி இருந்தால் எப்படி தங்கம் கிடைக்கும் என்பதை சிந்தித்து பார்க்க வேண்டும்.
பிரேசிலின் ரியோடி ஜெனீரோ நகரில் நடந்த ஒலிம்பிக் போட்டிகளில் இந்தியா வெண்கலம் மற்றும் வெள்ளி என வெறும் இரண்டு பதக்கங்கள் மட்டுமே வென்றுள்ளது. 120 வீரர், வீராங்கனைகள் இந்தியாவில் இருந்து ரியோ சென்றும் பதக்கம் வெல்ல முடியவில்லை.
இதற்கு விளையாட்டுத் துறை தான் காரணம் என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ரியோவில் நம் வீரர், வீராங்கனைகளுக்கு நடந்த கொடுமைகள் பற்றி தெரியுமா?