புஸாவ்: சீனா ஓபன் சூப்பர் சீரிஸ் பாட்மிண்டன் இறுதிப் போட்டியில் இந்தியாவின் சாய்னா நேவால் வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றினார்.
சீனாவின் புஸாவ் நகரில் நேற்று நடைபெற்ற மகளிர் ஒற்றையர் அரையிறுதியில் சாய்னா 21-17, 21-17 என்ற நேர் செட்களில் சீனாவைச் சேர்ந்த 17-ம் நிலை வீராங்கனையான லியூ ஸின்னை தோற்கடித்தார்.
இதையடுத்து சர்வதேச தரவரிசையில் 5-வது இடத்தில் இருக்கும் சாய்னா இன்று நடைபெற்ற இறுதிச்சுற்றில் ஜப்பானின் அகானே யமாகுச்சியை எதிர்கொண்டார்.
விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் யமகுசியை 21-12, 22-20 என்ற நேர்செட்டில் வீழ்த்தி சீனா ஓபன் பாட்மிண்டன் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார் சாய்னா நேவால்.