லக்னோ: சையது மோடி சர்வதேச பேட்மிண்டன் இறுதிச்சுற்றுப் போட்டியில் இந்திய வீரர் சமீர் வர்மா வெற்ற பெற்றார். 21-19 21-16 என்ற செட்கணக்கில் சக வீரரை வீழ்த்தி அவர் பட்டத்தை கைப்பற்றியுள்ளார்.
சையது மோடி சர்வதேச பேட்மிண்டன் போட்டிகள் உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோவில் நடைபெற்று வருகின்றன. இதன் ஆடவர் ஒற்றையர் இறுதிச்சுற்றில் இந்திய வீரர் சமீர் வர்மா சக வீரரான பிரனீத்தை எதிர்கொண்டார்.
தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய சமீர் வர்மா 21-19, 21-16 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று பட்டத்தை தட்டிச் சென்றார்.