For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மகளிர் டென்னிஸ் சங்க பட்டம்.. வென்றது சானியா -பிளேக் ஜோடி

சிங்கப்பூர்: மகளிர் டென்னிஸ் சங்க போட்டியில் மகளிர் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் சானியா மிர்ஸா - ஜிம்பாப்வேயின் காரா பிளேக் ஜோடி பட்டம் வென்றது.

சானியா ஜோடி இறுதிப் போட்டியில் 6-1, 6-0 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று பட்டத்தை தட்டிச் சென்றது.

இறுதிப் போட்டியில் நடப்புச் சாம்பியனான பெங் ஷுவாய் - ஷியா சுவெய் ஜோடியை வீழ்த்தியது சானியா ஜோடி.

பிளேக்குக்கு இது 3வது மகளிர் டென்னிஸ் சங்க பட்டமாகும். இதற்கு முன்பு இவர் 2008, 2008 ஆகிய ஆண்டுகளில் லீஸல் ஹூபருடன் இணைந்து இப்பட்டத்தை வென்றுள்ளார். அதேசமயம், சானியாவுக்கு இது முதல் பட்டமாகும்.

இறுதிப் போட்டியில் தொடக்கம் முதல் இறுதி வரை சானியா ஜோடியின் கையே ஓங்கியிருந்தது குறிப்பிடத்தக்கது. இதனால் இது ஒரு பக்க போட்டியாக மாறிப் போய் விட்டது.

Sania Mirza, Cara Black clinch doubles title at WTA Finals

கிராண்ட் ஸ்லாம் போட்டிகளைப் பொறுத்தவரை 35 வயதான பிளேக் ஐந்து இரட்டையர் மற்றும் ஐந்து கலப்பு இரட்டையர் பட்டங்களை வைத்துள்ளார். இந்த ஆண்டுடன் அவர் மகளிர் டென்னிஸ் சங்கப் போட்டிகளுக்கு விடை கொடுத்துள்ளார். எனவே அடுத்த ஆண்டு போட்டியில் சானியா, ஷியா சுவெய்யுடன் இணைகிறார்.

Story first published: Monday, October 27, 2014, 10:33 [IST]
Other articles published on Oct 27, 2014
English summary
In their last match together, Cara Black and Sania Mirza cruised to the doubles title at the WTA Finals with an authoritative 6-1, 6-0 win over defending champions Peng Shuai and Hsieh Su-Wei on Sunday. For Black, it was the third time she had won the doubles crown at the WTA Finals after 2007 and 2008 partnering Liezl Huber, while for Mirza it was her first victory at the season-ending championships.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X