ஷிவ தாபா...
இன்று நடைபெறும் இறுதி ஆட்டத்தில் ஷிவ தாபா, தாய்லாந்து வீரர் சாட்சாய் புட்தேவை எதிர்கொள்கிறார். இதற்கிடையே இறுதிப் போட்டிக்குள் நுழைந்ததன் மூலம், ஒலிம்பிக் போட்டிக்கு அவர் தகுதி பெற்றுள்ளார்.
பெருமை...
அசாம் மாநிலத்தைச் சேர்ந்தவர் ஷிவ தாபா (22). இவர் இரண்டாவது முறையாக ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார். அதோடு, இந்த ஆண்டு ஒலிம்பிக்கிற்கு தகுதி பெற்ற முதல் இந்திய குத்துச்சண்டை வீரர் என்ற பெருமையையும் அவர் பெற்றுள்ளார்.
நம்பிக்கை...
தனது இந்த வெற்றி குறித்து ஷிவ தாபா கூறுகையில், ‘மிகவும் முக்கியமான இந்த பந்தயத்துக்காக கடுமையாக உழைத்தேன். இதனால் எனது முழு ஆற்றலும் தீர்ந்து போனாலும் கூட, இப்போது தான் நிம்மதி அடைந்துள்ளேன். எனது இந்த வெற்றிகரமான பயணத்துக்கு உறுதுணையாக இருந்த பயிற்சியாளர் உள்ளிட்டோருக்கு நான் எவ்வளவு நன்றி தெரிவித்தாலும் போதாது. ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் வெல்ல வேண்டும் என்ற எதிர்பார்ப்பு இந்த முறை நல்லபடியாக நடக்கும் என்று நம்புகிறேன்' என்றார்.
தேவேந்திரசிங்...
இதேபோல், 49 கிலோ உடல் எடை பிரிவினருக்கான மற்றொரு அரை இறுதியில் காமன்வெல்த் விளையாட்டில் வெள்ளிப்பதக்கம் வென்றவரான இந்தியாவின் தேவேந்திரசிங் 0-3 என்ற கணக்கில் மங்கோலியா வீரர் ரோஜென் லாடோனிடம் தோற்றார்.
வெற்றி பெற்றால்...
வெண்கலப்பதக்கத்தை உறுதி செய்துள்ள தேவேந்திரசிங், ஒலிம்பிக் வாய்ப்புக்கான அடுத்த பந்தயத்தில் மங்கோலியா வீரர் கான் எர்டெனெவுடன் மோதுகிறார். இப்போட்டியில் வெற்றி பெற்றால் தேவேந்திரசிங் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
மேரிகோம்...
இதற்கிடையே 5 முறை உலக சாம்பியனும், லண்டன் ஒலிம்பிக் போட்டியில் வெண்கலப்பதக்கம் வென்றவருமான இந்திய நட்சத்திர வீராங்கனை மேரிகோம், பெண்களுக்கான 51 கிலோ உடல் எடைப்பிரிவின் அரை இறுதியில் 0-3 என்ற கணக்கில் சீன வீராங்கனை ரென் கேன்கேனிடம் அதிர்ச்சி தோல்வி அடைந்தார். இதனால், ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்பதற்கான வாய்ப்பு பறிபோனது.
மற்றொரு வாய்ப்பு...
ஆனால், வெண்கலப்பதக்கத்தை உறுதி செய்த மேரிகோம், கஜகஸ்தானில் மே மாதம் நடைபெறும் சவால் நிறைந்த உலக போட்டியில் வெற்றி பெற்றால் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற வாய்ப்பு கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.