மும்பை: மும்பையைச் சேர்ந்த ஒரு கிரிக்கெட் அணி மகா மோசமான ஒரு தோல்வியைச் சந்தித்துள்ளது. இது சாதனையாகவும் மாறியுள்ளது.
அந்த அணி 4 ரன்களில் ஆல் அவுட் ஆகி விட்டது அந்த அணியின் பேட்ஸ்மேன்களில் 9 பேர் டக் அவுட் ஆகி விட்டார்கள்.
இந்த பெருமை மிக அணியின் பெயர் ராஜன்ஸ் வித்யாலயா (அந்தேரி). பள்ளிகளுக்கு இடையிலான 16 வயதுக்குட்பட்டோருக்கான பிளேட் குரூப் இறுதிப் போட்டியில் ராஜன்ஸ் அணியும், யசோதம் ஹைஸ்கூல் அணியும் மோதின.
இதில் ராஜஸ்ன்ஸ் அணி தனது 2வது இன்னிங்ஸில் 4 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. அந்த அணியின் 9 வீரர்கள் டக் அவுட் ஆனார்கள்.
யசோதம் அணியின் பந்து வீச்சாளர்களான கெளரங் சச்சார் 6 விக்கெட்களையும், ரியான் தாமஸ், 4 விக்கெட்களையும் வீழ்த்தினர்.
இதில் ஒரு வீரர் 2 ரன் எடுத்தார். மற்ற இரு ரன்களும் லைக் பை மூலம் வந்ததாகும்.
இது ஒரு வரலாறு காணாத தோல்வி என்று வர்ணிக்கப்பட்டுள்ளது. என்ன நடந்தது என்றே தெரியவில்லை என்று ராஜன்ஸ் அணியின் பயிற்சியாளர் நியாஸ் வர்சி கூறியுள்ளார்.