For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

எடுத்தது 4 ரன்... கிடைத்தது 9 முட்டை...செம அடி வாங்கிய மும்பை!

மும்பை: மும்பையைச் சேர்ந்த ஒரு கிரிக்கெட் அணி மகா மோசமான ஒரு தோல்வியைச் சந்தித்துள்ளது. இது சாதனையாகவும் மாறியுள்ளது.

அந்த அணி 4 ரன்களில் ஆல் அவுட் ஆகி விட்டது அந்த அணியின் பேட்ஸ்மேன்களில் 9 பேர் டக் அவுட் ஆகி விட்டார்கள்.

இந்த பெருமை மிக அணியின் பெயர் ராஜன்ஸ் வித்யாலயா (அந்தேரி). பள்ளிகளுக்கு இடையிலான 16 வயதுக்குட்பட்டோருக்கான பிளேட் குரூப் இறுதிப் போட்டியில் ராஜன்ஸ் அணியும், யசோதம் ஹைஸ்கூல் அணியும் மோதின.

Unwanted record: 9 ducks and Mumbai team all out for just 4 runs!

இதில் ராஜஸ்ன்ஸ் அணி தனது 2வது இன்னிங்ஸில் 4 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. அந்த அணியின் 9 வீரர்கள் டக் அவுட் ஆனார்கள்.

யசோதம் அணியின் பந்து வீச்சாளர்களான கெளரங் சச்சார் 6 விக்கெட்களையும், ரியான் தாமஸ், 4 விக்கெட்களையும் வீழ்த்தினர்.

இதில் ஒரு வீரர் 2 ரன் எடுத்தார். மற்ற இரு ரன்களும் லைக் பை மூலம் வந்ததாகும்.

இது ஒரு வரலாறு காணாத தோல்வி என்று வர்ணிக்கப்பட்டுள்ளது. என்ன நடந்தது என்றே தெரியவில்லை என்று ராஜன்ஸ் அணியின் பயிற்சியாளர் நியாஸ் வர்சி கூறியுள்ளார்.

Story first published: Friday, December 26, 2014, 12:43 [IST]
Other articles published on Dec 26, 2014
English summary
A cricket team in Mumbai was bowled out for just 4 runs, a record, with 9 of their batsmen getting dismissed without scoring. According to a report in "DNA" newspaper, Rajhans Vidyalaya (Andheri) were all out for 4 against Yashodham High School in the Plate Group final (Under-16) of the Harris Shield Inter-School Cricket Tournament, at Shivaji Park, on Wednesday (December 24).
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X